Home அரசியல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்..!! ட்ரோன் பறக்கத் தடை.. மோடி வருவதற்கான காரணம் இதுவா.?

சென்னையில் பாதுகாப்பு தீவிரம்..!! ட்ரோன் பறக்கத் தடை.. மோடி வருவதற்கான காரணம் இதுவா.?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகிற 23-ம் தேதி (ஜனவரி 23, 2026) சென்னைக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலைய வட்டாரத்தில் ட்ரோன்கள் (Drones) பறக்கத் தடை விதிக்கப்படுவதாகக்

காவல்துறை அறிவித்துள்ளது. இந்தத் தடையானது விமான நிலையப் பகுதி மட்டுமல்லாமல், சென்னை மாநகர் முழுவதும் அமலில் இருக்கும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனுமதியின்றி

ட்ரோன்கள் அல்லது இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது…

Exit mobile version