1. பாத்திரம் கழுவும் ஸ்பான்ஞ்ச் (Dish Sponge)
சிங்க் ஓரத்தில் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் ஸ்பான்ஞ்ச், கிருமிகளின் சொர்க்கபுரியாகும். இதில் இருக்கும் சிறு துளைகளில் உணவுத் துகள்கள் தங்கி, லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கிறது. இதை அடிக்கடி மாற்றுவது அல்லது வெந்நீரில் போட்டு எடுப்பது அவசியம்.
2. மரக்கட்டைகள் மற்றும் மரக்கரண்டிகள்
மரம் இயற்கையிலேயே ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. சிங்க் அருகே மரத்தாலான கட்டிங் போர்டு அல்லது கரண்டிகளை வைக்கும்போது, அதில் பூஞ்சை (Mold) காளான்கள் எளிதில் உருவாகின்றன. இவை உணவின் மூலம் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும்.
3. ஈரம் நிறைந்த துணிகள்
கை துடைக்க அல்லது மேடையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் துணிகளை சிங்க் குழாயின் மீதோ அல்லது ஓரத்திலோ தொங்கவிடுவது மிகப்பெரிய தவறு. காற்று புகாத ஈரமான துணிகளில் ‘சால்மோனெல்லா’ போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் மிக வேகமாகப் பெருகும்.
4. பிளாஸ்டிக் ஸ்க்ரப்பர்கள் மற்றும் பிரஷ்கள்
பிளாஸ்டிக் நாரினால் ஆன ஸ்க்ரப்பர்களில் அழுக்குகள் எளிதில் சிக்கும். சரியாகக் கழுவி உலர்த்தாமல் சிங்க் அருகிலேயே வைப்பதால், அடுத்த முறை பாத்திரம் கழுவும்போது கிருமிகள் மீண்டும் பாத்திரங்களுக்கே பரவுகின்றன.
5. மருந்துகள் மற்றும் ரசாயனங்கள்
சிலர் சிங்க் அருகிலுள்ள ஜன்னல் ஓரத்தில் மருந்து பாட்டில்களை வைப்பார்கள். சிங்க் பகுதியில் நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மருந்தின் வீரியத்தைக் குறைப்பதோடு, மருந்தின் மீது கிருமிகள் படியவும் காரணமாகிறது.
