Home சினிமா தூங்காமல் வேலை செய்கிறோம்..!! அட்லீ கொடுத்த மாஸ் அப்டேட்..!!

தூங்காமல் வேலை செய்கிறோம்..!! அட்லீ கொடுத்த மாஸ் அப்டேட்..!!

இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட கூட்டணியான அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ இணையும் புதிய படம் குறித்த முக்கிய தகவலை அட்லீ பகிர்ந்துள்ளார். “இந்தத் திட்டத்திற்காக நாங்கள் தூங்காமல் பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் கூறியிருப்பது

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அட்லீ யாருடன் இணைவார் என்ற கேள்வி இந்தியத் திரையுலகில்

பலமாக இருந்தது. இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் அவர் இணைவது உறுதியாகியுள்ளது. சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இது குறித்துப் பேசிய அட்லீ, “அல்லு அர்ஜுன் சாருடனான படம்

மிகப் பெரிய அளவில் உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சொல்லப்போனால், சிறந்ததொரு படைப்பைத் தருவதற்காக நானும் எனது குழுவினரும் தூங்காமல் பணியாற்றி வருகிறோம்,”

என்று உற்சாகமாகத் தெரிவித்தார். ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடித் தமிழ்ப் படமாகவும், பான்-இந்தியத் திரைப்படமாகவும் இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அட்லீயின் வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கலந்த கமர்ஷியல் விருந்தாக இப்படம் அமையும் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Exit mobile version