தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் என்பது குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தவெக நிர்வாகி அருண்ராஜ் அளித்துள்ள விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.தவெக தலைவர் விஜய், தற்போது கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், “விஜய் எப்போது முறையாக ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளிப்பார்?”
என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் எப்போது செய்தியாளர்களைச் சந்திக்கிறாரோ, அதற்கு அடுத்த நாள் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.விஜய் தற்போது வரை ‘ஆஃப் தி கேமரா’ (Off the camera) முறையில் மட்டுமே பேட்டிகள் மற்றும் உரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.
முறைப்படியான செய்தியாளர் சந்திப்பு எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பிற்கு, ஆளுங்கட்சியின் நகர்வை ஒட்டியே தங்களின் திட்டமும் இருக்கும் என்பதை அருண்ராஜ் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…
