பொதுவாக வனவிலங்குகளை பார்ப்பதற்கு என்று கூட்டம் கூட்டமாக குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பூங்காவிற்கு சென்று கண்டு ரசிப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அந்த வகையில் ஒரு யானை தோட்டத்தில் இருக்கும் உயரமான மரத்தில் இருக்கும் பலாப்பழத்தை தனது தும்பிக்கையால் அழகாக பறித்துக் கொண்டு தனது காலில் வைத்து அமுக்கி அதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டு செல்கிறது. இதனை அங்கு சென்று கொண்டிருந்த ஒருவர் பார்த்தவுடன்
https://www.youtube.com/embed/tvdltUFREKk?si=1qjYlGnyp0Twkc1D
அழகாக இருக்கிறது என்று புகைப்பட மற்றும் வீடியோக்களை எடுத்து அதனை இணையதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்ப்பதற்கும் மிகவும் அழகான ஒரு வீடியோவாக இருக்கிறது. இந்த வீடியோவை நீங்களும் கண்டு மகிழுங்கள்…
