Home அரசியல் “200 தொகுதிகளில் வெற்றி” – அன்புமணி ராமதாஸின் அதிரடி கணிப்பு..!!

“200 தொகுதிகளில் வெற்றி” – அன்புமணி ராமதாஸின் அதிரடி கணிப்பு..!!

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் தேர்தல் என்பது பிரதானமாக அதிமுக-விற்கும், திமுக-விற்கும் இடையே நடக்கும் போட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்தத் தேர்தலில் தங்களது கூட்டணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆன்மீகப் பயணத்திற்குப் பின் அவர் ஆற்றிய இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மக்களின் ஆதரவு தங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். 2026-க்கான தேர்தல் வியூகங்களை இப்போதே தங்களது கூட்டணி வலுவாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்…

Exit mobile version