உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவர்களைக் கோடீஸ்வரர்களாக மாற்றவும் மத்திய அரசு ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) என்ற புதிய சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மிகக்குறைந்த முதலீடான மாதம் வெறும் ரூ.1,000 செலுத்தினால் போதுமானது. உங்கள் குழந்தையின் பெயரில் இந்தத் தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வரும்போது,
குழந்தை மேஜராகும் (18 வயது) சமயத்தில் சுமார் ரூ.5.50 லட்சம் வரை கையில் கிடைக்கும்.மேலும், இதே சேமிப்பை அக்குழந்தையின் 60 வயது வரை தொடரும் பட்சத்தில், கூட்டு வட்டி (Compound Interest) அடிப்படையில் அந்தத் தொகையானது அசுர வளர்ச்சி அடைந்து,
முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.2.75 கோடியாக திரும்பக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மிகக்குறைந்த முதலீட்டில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்…

