தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாகவும், திராவிட கருத்தியலுக்கு எதிரான அவரது போக்கைக் கண்டித்தும், வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர்
ஆர்.என். ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொ. திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வு மற்றும் கண்டனம்:
இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் பாதியிலேயே வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், “ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியிருப்பது
அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பிலிருக்கும்வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார்,” என்று விமர்சித்தார்…

