இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாணம், தற்போது வெறும் கலாச்சாரத் தலைநகராக மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரப் போட்டியின் மையப்புள்ளியாகவும் மாறி வருகிறது.
“யாழில் முதலீட்டுக்கான பந்தயம்” என வர்ணிக்கப்படும் அளவிற்கு, பல்வேறு உலக நாடுகள் வடக்கில் தங்கள் தடத்தைப் பதிக்கத் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. களத்தில் குதித்துள்ள ‘ராஜதந்திர குதிரைகள்’
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்திற்கான வெளிநாட்டுத் தூதுவர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டி வெளிப்படையாகவே தெரிகிறது.
இவர்களைத் தவிர, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை அரசியல் விமர்சகர்கள், “முதலீட்டுப் போர்க்களத்தில் இறக்கிவிடப்பட்ட இராஜதந்திர குதிரைகள்” என வர்ணிக்கின்றனர்…
