ஆள் பாதி ஆடை பாதி” என்பது பழமொழி மட்டுமல்ல, இன்றைய நவீன உலகின் நிதர்சனமும் கூட. ஒருவரின் ஆளுமையை (Personality) வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்கள் மட்டுமல்ல, அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஆண்கள் தங்களை எப்படி அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த முக்கியக் குறிப்புகளை இங்கே காண்போம்.
ஆண்கள் தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை; சிறிய மாற்றங்களே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
-
சரியான அளவு (Perfect Fit): விலை உயர்ந்த ஆடையை விட, உடலுக்குப் பொருத்தமான ஆடையே சிறந்தது. மிகவும் இறுக்கமாகவோ அல்லது தொலதொலவெனவோ இல்லாமல், கச்சிதமான அளவில் (Fit) ஆடைகளை அணிவது முக்கியம்.
-
நிறத் தேர்வு (Color Combination): நம் நிறத்திற்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அடர் நிறச் சட்டைக்கு மெல்லிய நிற பேண்ட் அல்லது ஜீன்ஸ் அணிவது கிளாசிக் தோற்றத்தைத் தரும்.
-
காலணிகள் (Shoes): ஒருவர் நம்மைப் பார்க்கும்போது முதலில் கவனிக்கும் விஷயங்களில் ஒன்று காலணி. ஆடைக்கு ஏற்றவாறு ஃபார்மல் அல்லது கேஷுவல் ஷூக்களை அணிய வேண்டும். முக்கியமாக அவை சுத்தமாக இருக்க வேண்டும்.
-
கைகடிகாரம் (Watch): ஒரு ஆணின் முழுமையான தோற்றத்திற்கு கைக்கடிகாரம் மிக முக்கியம். அது ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.
-
சுத்தம் மற்றும் நறுமணம்: ஆடைகள் துவைக்கப்பட்டு, கசங்காமல் அயர்ன் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, மிதமான நறுமணம் வீசும் சென்ட் (Perfume) பயன்படுத்துவது மற்றவர்களை எளிதில் ஈர்க்கும்.
இறுதியாக, என்ன ஆடை அணிந்தாலும் அதைத் தன்னம்பிக்கையுடன் அணிவதே (Confidence) உண்மையான அழகு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…

