“சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூச்சமில்லாமல் பொய் பேசிவிட்டுச் சென்றுள்ளார் பிரதமர்.
உண்மையில், இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது,” என்று அவர் பேசினார். இந்த மாநாட்டில் ஏராளமான பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

