அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்ஸி என்பவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி 2022 பிபா உலகக் கோப்பை வென்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் இந்தியா வந்தபோது மிகப்பெரிய கூட்டம் அலைமோதி கொண்ட இவரை பார்ப்பதற்கு வந்தார்கள்.
இவரை பார்ப்பதற்கு சாதாரண நபர்கள் மட்டும் வராமல் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் அம்பானி மகன் போன்ற பல பிரபலங்கள் இவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்தியாவில் பல இடத்தில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையில் மெஸ்ஸி குஜராத்தில் உள்ள ஒரு பகுதியில் பூங்காவிற்கு சென்று உள்ளார். அமெரிக்கா சென்ற பிறகு இவர் இந்தியாவில் பயணம் செய்த எனக்கு நல்ல மரியாதை கொடுத்தார்கள் அன்பான வரவேற்பு எனக்கு கிடைத்தது. இருப்பினும் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவு இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்…

