அசைவ பிரியர்கள் பொதுவாக மீன், நண்டு, இறால் போன்ற உணவுகளை விரும்பி உண்பது வழக்கம். அந்த வரிசையில், கடல் உணவுகளில் தனித்துவமான சுவை கொண்டதாகக் கருதப்படுவது ‘கணவாய்’ (Squid) மீன். பொதுவாக கணவாய் மீனைத் தொக்கு அல்லது
குழம்பு வைத்து உண்பதை விட, அதனை மசாலா தடவி எண்ணெயீல் பொரித்து ‘மொறுமொறு’ வறுவலாகச் சாப்பிடுவது தற்போது உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சரியான பக்குவத்தில் மசாலா சேர்த்து, கணவாய் மீனைப் பொரித்து எடுத்தால், அதன் மொறுமொறுப்பான சுவைக்கு ஈடு இணையே இல்லை. இதை ஒருமுறை சுவைத்தவர்கள் நிச்சயம் மீண்டும் மீண்டும் விரும்பி உண்பார்கள் என்று
சமையல் கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களிலோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ இந்த கணவாய் மீன் ஃபிரையை செய்து கொடுத்தால்,
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதிக புரதச்சத்தும், குறைவான கொழுப்பும் கொண்ட இந்த கணவாய் மீன், சுவையில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் சிறந்தது…

