பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆளும் திமுக அரசைத் தீவிரமாக விமர்சித்துப் பேசியுள்ளார். தங்களது கூட்டணியின் வலிமையைப் பார்த்து திமுக தற்போது பயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தங்கள் கூட்டணி இத்துடன் நின்றுவிடவில்லை என்றும், விரைவில் மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு அவர் தெளிவான பதிலளித்தார்.
“கூட்டணி ஆட்சி குறித்த முடிவுகள் அனைத்தும் தேர்தலுக்குப் பிறகே எடுக்கப்படும்,” என்று அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய சூழலே அதிகாரப் பகிர்வைத் தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது…
