Monday, March 2, 2026
No menu items!

மகாராஷ்டிராவில் சோகம் – விமானம் நொறுங்கி விழுந்து துணை முதல்வர் பலி..!!

இந்திய அரசியல் களத்தை உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிச் செய்தி மகாராஷ்டிராவில் இருந்து வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத் துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது.இன்று காலை 8.45 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில், அதில் பயணம் செய்த அஜித் பவார் உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துணை முதல்வர் அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிரா மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட வாய்ப்புள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News