Monday, March 2, 2026
No menu items!

IND vs NZ: 3-0 எனத் தொடரை வென்ற இந்தியா; 4-வது போட்டியிலும் அதிரடி காட்டுமா.?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் (Toss) வென்ற

இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், சம்பிரதாயத்திற்கு நடைபெறும் இந்த 4-வது போட்டியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற பிறகு இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்பதன்

மூலம், எதிரணியான நியூசிலாந்தை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தும் முனைப்பில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News