தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேமுதிகவிற்குத் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் .
இன்றும் அமோக ஆதரவு உள்ளது,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பதிலளித்தார். “கூட்டணி குறித்த எங்களது நிலைப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு,
வரும் 3-ம் தேதி வெளியிடப்படும்,” என்று அவர் தேதியைக் குறிப்பிட்டுள்ளார். பிரேமலதாவின் இந்த அறிவிப்புத் தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…
