தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்டிருந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (30.01.2026) நிறைவடைகிறது.இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி ,
உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாகவும், நேரடி மையங்கள் மூலமாகவும் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றப்பட்ட படிவங்கள் அனைத்தும் அதிகாரிகளால் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், எதிர்வரும் பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. எனவே, விடுபட்ட வாக்காளர்கள் காலம் தாழ்த்தாமல் இன்றே விண்ணப்பிப்பது அவசியம்…
