இந்திய கிரிக்கெட் அணி தற்போது விளையாடி வரும் தொடரில், இன்றைய போட்டிக்கான டாஸ் (Toss) நிகழ்வின் போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர்,
இன்றைய போட்டியில் இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சாதாரணமாக மாற்றங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு கலந்த கவலை இருக்கும்.
ஆனால், கேரள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூர்யகுமார் யாதவ் ஒரு கருத்தைக் கூறினார். அவர் பேசுகையில், “அணியில் 3 மாற்றங்களைச் செய்துள்ளோம்,
ஆனால் கவலை வேண்டாம் திருவனந்தபுரம். சஞ்சு சாம்சன் இன்று விளையாடுகிறார்,” என்று புன்னகையுடன் தெரிவித்தார். உள்ளூர் நாயகன் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றுள்ள செய்தி,
மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவின் இந்த சமயோசிதமான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

