Monday, March 2, 2026
No menu items!

அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிப்பு – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தகவல்..!!

திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்களாகக் கல்வியும் மருத்துவமும் விளங்குவதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியானது வெறும் செலவு அல்ல, அது வருங்காலச் சமுதாயத்திற்கான மிகச்சிறந்த முதலீடு என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

தரமான சிகிச்சை மற்றும் நவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் உறுதி செய்வதே அரசின் முதன்மை இலக்கு என்பதைத் தனது உரையின் மூலம் அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News