முறையான பராமரிப்பு இருந்தும் பலருக்குப் பற்கள் மஞ்சள் நிறமாகவே காணப்படுவது பெரும் கவலையாக உள்ளது. பற்கள் மஞ்சள் நிறமடைவதற்குத் தவறான உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல்நல பாதிப்புகள் மற்றும் வயது முதிர்வு எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தகைய கறைகளை நீக்க விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடுவதற்கு முன்பாக, வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் தீர்வு காண முடியும். குறிப்பாக, சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவை இதற்குச் சிறந்த மருந்தாக அமைகிறது.
சமையல் சோடாவுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போலச் செய்து, பற்களில் மெதுவாகத் தேய்த்து வர வேண்டும். சமையல் சோடா பற்களில் படிந்துள்ள பிடிவாதமான கறைகளை அகற்ற உதவுகிறது; எலுமிச்சையிலுள்ள இயற்கையான அமிலத்தன்மை மஞ்சள் நிறத்தைக் குறைக்கிறது. இருப்பினும், எலுமிச்சையிலுள்ள அமிலம் பல் எனாமலை (Enamel) பாதிக்கும் என்பதால்,
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, தன்னம்பிக்கையான புன்னகையையும் பெறலாம்…
