Monday, March 2, 2026
No menu items!

முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்.. 300 நோய்களுக்கு ஒரே தீர்வு..!!

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஒரு கிலோ ஆப்பிளுக்குச் சமம்” என்பது கிராமத்து பழமொழி மட்டுமல்ல, அதுதான் இன்றைய நவீன மருத்துவ உலகின் தாரக மந்திரமாகவும் மாறியுள்ளது. தினமும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வியக்கத்தக்க தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

300 நோய்களுக்கு முற்றுப்புள்ளி?

சித்த மருத்துவத்தின்படி, முருங்கை 300-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் ஆரஞ்சை விட 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ மற்றும் பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்: இரத்த சோகையினால் (Anemia) அவதிப்படுபவர்கள் தினமும் முருங்கை கீரையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மளமளவென உயரும்.

  • எலும்புகள் பலம் பெறும்: இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக, மூட்டு வலி மற்றும் எலும்புத் தேய்மானம் தடுக்கப்படுகிறது.

  • கண் பார்வைத் திறன்: வைட்டமின் ‘ஏ’ இதில் அபரிமிதமாக இருப்பதால், கண் புரை மற்றும் மாலைக்கண் நோயைத் தடுத்து பார்வையைத் தெளிவாக்குகிறது.

  • சர்க்கரை நோய் கட்டுப்பாடு: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைநிறுத்த முருங்கை கீரை ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

யார் தவிர்க்க வேண்டும்?

முருங்கை கீரை ஆரோக்கியமானது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. குறிப்பாக, சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி தினமும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News