Sunday, March 1, 2026
No menu items!

ஈரான் – அமெரிக்கா இடையே போர் மேகங்கள்.? அதிரடியாகக் களமிறங்கிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்..

உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு (USS Gerald R. Ford) ஈரானை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

தற்போது கரீபியன் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல், திடீரென ஈரானிய எல்லைகளை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் அரசியல் மோதல்கள் மற்றும் ராஜதந்திர ரீதியிலான முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்த ராணுவ நகர்வு சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பலின் வருகையினால் பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஈரான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்தப் போர் பதற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News