பிடபிள்யுஎப் (BWF) பாரா உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் களம் கண்டார்.
இறுதிப் போட்டியில் இவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த வலுவான போட்டியாளரான முகம்மது அல் இம்ரானை (Muhammad Al Imran) எதிர்த்து விளையாடினார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரமோத் பகத், 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷிய வீரரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற பிரமோத் பகத்திற்கு விளையாட்டுத் துறையினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்…

