உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோயிலில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கோயிலின் 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா சிவராத்திரி
தினத்தில் லிங்கோத்பவரை வழிபடுவது மிகவும் விசேஷமானது என்பதால், சுவாமிக்கு மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது…

