Monday, March 2, 2026
No menu items!

பங்குச்சந்தை ஜாம்பவான் வாரன் பபெட் ஓய்வு: 60 ஆண்டுகால சகாப்தம் நிறைவு!

உலக அளவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ஆசானாகவும், வழிகாட்டியாகவும் போற்றப்படும் வாரன் பபெட், தனது 95-வது வயதில் அதிகாரப்பூர்வமாகப் பணி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

60 ஆண்டுகால சேவை: கடந்த 60 ஆண்டுகாலமாக பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தை மிகச்சிறந்த முறையில் வழிநடத்தி வந்தவர் வாரன் பபெட். அந்நிறுவனத்தின் சிஇஓ (CEO) பொறுப்பில் இருந்து வந்த அவர், தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களின் ஆசான்: எளிமையான வாழ்க்கை முறை மற்றும் தீர்க்கமான முதலீட்டு உத்திகளுக்காக உலகப்புகழ் பெற்றவர் பபெட். பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடு மூலம் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இவருடைய முதலீட்டு ஆலோசனைகளை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் வேதவாக்காகப் பின்பற்றி வருகின்றனர்.

சகாப்தத்தின் முடிவு: பணக்காரர்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வந்தாலும், தனது ஈட்டும் வருமானத்தில் பெரும்பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கியவர். தற்போது 95 வயதில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது உலக நிதிச் சந்தையில் ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்களும், முதலீட்டாளர்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News