ஆரம்ப காலகட்டங்களில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராக மாறி அதன் பின்னர் நடிகராக இருந்து வந்தவர் சீமான் . இதன் பிறகு இவர் “நாம் தமிழர் கட்சி” என்ற கட்சியை தொடங்கி பல வருடங்களாக பல தவறுகளை தட்டி கேட்டு வருகிறார் சீமான் . மேலும் இவர் கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இவர் மீது பல பேருக்கு மதிப்பு மரியாதை இருந்தது . ஆனால் தற்போது இவர் நடக்காத கதைகளை கூறி காதில் பூசுற்றி வருவதால்,
தற்போது பல விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார் சீமான் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஜனநாயகன்” படத்தின் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். அதில் தணிக்கை சான்றிதழ் தராமல் நெருக்கடி தரம் அளவிற்கு ஒன்றும் இல்லை .
இதற்காக தணிக்கை சான்றிதழ் கொடுப்பதற்கு இழுத்தடிப்பதற்கும் அவசியமும் இல்லை .மேலும் என் தம்பி விஜய் எனக்கு எதிரியும் இல்லை, போட்டியும் இல்லை எனக்கு எதிரியே மற்ற பெரிய கட்சிகள் தான் என்று கூறியிருந்தார் சீமான்…
