இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சர்க்கரை நோய் (Diabetes) பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மருந்துகளை விட, சரியான உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், சர்க்கரை நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு எளிய இயற்கை பானம் குறித்து இங்கே காண்போம்.
இதற்கு 2 கப் தண்ணீர், 2 ஸ்பூன் வெந்தயம், 2 கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை தேவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் வெந்தயத்தைச் சேர்க்கவும். பின்னர் இடித்த இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் இலவங்கப்பட்டையைச் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின் வடிகட்டி, ஆறவைத்து பருகலாம். இந்தப் பானத்தைத் தினமும் குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்து கட்டுக்குள் இருக்கும். இது வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவும் எளிய வழியாகும்.
