தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த வட கிழக்கு பருவமழை, நேற்றுடன் முற்றிலுமாக விலகிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம்
முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வந்தது. முன்னதாக, கேரளாவில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழையின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரையில் தமிழகத்திலும்
நீடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அக்டோபரில் தொடங்கி இதுவரை நீடித்து வந்த வட கிழக்கு பருவமழை, நேற்றுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது…

