பெண்களின் முக அழகை மிகைப்படுத்திக் காட்டுவதில் கண்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பணிச்சுமை போன்ற காரணங்களால் பலருக்கும் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றி, முகத்தை மிகவும் சோர்வாகவும் வயதான தோற்றத்துடனும் காட்டுகின்றன.இந்தக் கருவளையங்களை நிரந்தரமாகப் போக்க, விலையுயர்ந்த க்ரீம்களை விட வீட்டில் உள்ள ஆரஞ்சு பழத்தைக் கொண்டே எளிய முறையில் தீர்வு காணலாம் என்று அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதோ அதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள்:
முதலாவதாக, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஆரஞ்சு சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை கண்களுக்கு அடியில் கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவ வேண்டும். தயிர் மற்றும் ஆரஞ்சு சாறு இணையும்போது அது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கிறது.
இரண்டாவதாக, ஆரஞ்சு சாறுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல கெட்டியாகக் கலக்க வேண்டும். இதைத் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறைகளைத் தொடர்ந்து செய்து வந்தால், பிடிவாதமான கருவளையங்களும் நிரந்தரமாக நீங்கி கண்கள் ஜொலிக்கும்.
