நடப்பு 2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தொடரின் ஆரம்பம் முதலே
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணி, இதுவரை விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.
இந்தத் தொடர் வெற்றிகளின் மூலம், நடப்பு சீசனில் முதல் அணியாக ‘பிளே-ஆஃப்’ (Playoffs) சுற்றுக்குத் தகுதி பெற்று ஆர்சிபி அணி சாதனை படைத்துள்ளது. கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான தலைமை மற்றும் அணியின் ஒருங்கிணைந்த
செயல்பாடு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்…

