தற்போது திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் தனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருவதாகக் கூறினார். குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு இருந்ததால் மட்டுமே, வாரணம் ஆயிரம்,
பேட்ட மற்றும் தற்போது தயாராகி வரும் ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) போன்ற படங்களில் தன்னால் நடிக்க முடிந்தது என்றார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும்
விருது விழாக்களிலும் தான் தொடர்ந்து பங்குபெற்று வருவதாகக் குறிப்பிட்ட சிம்ரன், தனது வேலைக்கும் ரசிகர்களுக்கும் உண்மையாக இருப்பதே தனது கொள்கை என்றார்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாகவே தன்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது என்று அவர் மேடையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்…

