Monday, March 2, 2026
No menu items!

சொந்த மண்ணில் வாங்கிய அடி.. பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று நடக்கும் அக்னிப் பரீட்சை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் இன்று வெகு விமரிசையாகத் தொடங்குகிறது.

நாக்பூர் கிரிக்கெட் மைதானம். போட்டி இன்று இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது.இன்றைய போட்டி இந்திய அணிக்குத் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்

சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் சந்தித்த இந்தத் தோல்வி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஒருநாள் தொடரில் விட்டதை டி20 தொடரில் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்தத் தொடரைக் கைப்பற்றி, ஒருநாள் தொடர் தோல்விக்குப் பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தீவிர முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News