காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மஸ்தான் சாகிப் தர்காவின் வருடாந்திர கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு,
நாளை (ஜனவரி 29) ஒருநாள் மட்டும் காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும்,
பள்ளிகளில் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) அல்லது முன்பருவத் தேர்வுகள் (Preparatory Exams) ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், அவை எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடியே நடைபெறும் எனவும் அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது…
