Thursday, July 16, 2026

கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்தது சவுதி அரேபியா..!! 26 ஆண்டுகளில் இல்லாத புதிய திருப்பம்..!!

உலகப் பொருளாதார சந்தையிலும், சர்வதேச எரிபொருள் சந்தையிலும் மிக முக்கிய மாற்றமாக கச்சா எண்ணெயின் விலை அதிரடியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சவுதி அரேபியா, கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே மாதத்தில் கச்சா எண்ணெய் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் இருந்த தடைகள் மற்றும் பதற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன.இந்தப் போர் நிறுத்தத்தின் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் பிரண்ட் (Brent) ரகக் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 72 டாலராகக் குறைந்து புதிய சரிவை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை வீழ்ச்சி காரணமாக, இந்தியாவில் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் வருமா என்ற விவாதம் எழுந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைத் தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பாலான பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து வருவதால், இந்த சர்வதேச விலை வீழ்ச்சி இந்தியாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது.இதன் காரணமாக உள்நாட்டுச் சந்தையிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துச் சாமானிய மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எரிபொருள் விலை குறைந்தால் அது நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.சவுதி அரேபியாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விலை குறைப்பு மற்றும் உலக அரசியல் சூழல் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொருளாதார வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News