உலகின் அதிக சந்தாதாரர்களைக் (Subscribers) கொண்ட முன்னணி யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட் (MrBeast), தனது மறைவுக்குப் பிறகும் தனது சேனல் தொடர்ந்து செயல்படுவதற்கான ஒரு தீர்க்கதரிசனமான திட்டத்தை வகுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, தான் இறந்த பிறகும் கூட தனது யூடியூப் சேனல் முடங்கிவிடாமல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் பிரத்யேகமாக
15 வீடியோக்களை முன்கூட்டியே படம்பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒருவேளை தனக்கு ஏதேனும் நேர்ந்தால், தனது சேனலின் செயல்பாடு நின்றுவிடக்கூடாது என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னோக்கான நடவடிக்கை,
இணைய உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மிஸ்டர் பீஸ்ட்டின் இந்தத் திட்டமிடலைக் கண்டு வியந்துபோன அவரது ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் பாராட்டுகளையும், ஆச்சரியத்தையும் தெரிவித்து வருகின்றனர்…

