நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், “நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குப் பதிலளிக்கத் தாம் தயாராக இருப்பதாக” பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்துப் பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. நாடாளுமன்றம் மக்களின் வளர்ச்சி மற்றும்
மேம்பாட்டிற்கான இடமாக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். மேலும், பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், “ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. வரும் 2028-ம் ஆண்டிற்குள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3-ம் இடத்தைப் பிடிக்கும்,” என்று உறுதியளித்துள்ளார்…

