நடிகர் விஜய்யின் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய திரைப்படத் தணிக்கை குழு (CBFC) அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இது திரையுலக வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது கட்சியைத் தொடங்கியுள்ள சூழலில், ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பிலும், படத்தின் உள்ளடக்கத்திலும் அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கை குழுவின் இறுதி முடிவிற்குப் பிறகே படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், படத்தை ஆய்வு செய்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள சில கூர்மையான
அரசியல் வசனங்கள் மற்றும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, “தேர்தல் மற்றும் ஜனநாயகம்” தொடர்பான 5 முக்கிய வசனங்களை நீக்கினால்
மட்டுமே ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்கப்படும் எனத் தணிக்கை குழு கெடுபிடி காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த படத்தயாரிப்பு நிறுவனம், மறுசீராய்வு குழுவிற்கு (Revising Committee) செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தணிக்கை குழுவின்
இந்தத் திடீர் முடிவு படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற அச்சம் விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்துப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது…

