தற்போதைய மாறிவரும் வானிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக பலருக்கும் தோல் பராமரிப்பு சவாலாக உள்ளது. உடலில் ஈரப்பதம் குறைவதால் உதடுகள் வறண்டு போவதுடன், கருமையாகவும் மாறத் தொடங்குகின்றன. இதற்குத் தீர்வாக ரசாயனம் கலந்த லிப் பாம்களைத் தவிர்த்து, வீட்டிலுள்ள தேங்காய் எண்ணெயைக் கொண்டு எளிய முறையில் தீர்வு காணலாம். தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு தேன் கலந்து உதடுகளில் 15 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்வதன் மூலம்,
வெடித்த உதடுகள் மீண்டும் மென்மையாகும். அதேபோல், புதிய கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் உதடுகள் நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த இயற்கை முறைகள் வறட்சியைத் தடுப்பதுடன், இதமான உணர்வையும் அளிக்கும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இனி விலையுயர்ந்த வாசலைனைத் தேடிச் செல்லாமல், சமையலறைப் பொருட்களைக் கொண்டே உங்கள் புன்னகையை அழகாக்கலாம்…

