தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் சூடுபிடித்துள்ளது. இது குறித்து தங்களின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஆளுநரின் உரை மற்றும் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய ஆளுநர் உரை என்பது மக்கள் நலனுக்கானதாக இல்லை என்றும், அது வெறும் “ரீல்ஸ் கன்டென்ட்” மெட்டீரியலாக மட்டுமே உள்ளது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.மேலும், தற்போதைய தவெக அரசுக்கு என்று எந்த ஒரு தனித்துவமான சிந்தனையோ அல்லது புதிய திட்டங்களோ இல்லை என்று குற்றம் சாட்டினார்.
கடந்த கால திமுக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை அப்படியே எடுத்து, தவெக அரசு “காப்பி பேஸ்ட்” செய்து தங்களின் திட்டங்களாகக் காட்டி ஏமாற்றி வருவதாக அவர் மிக அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த எந்தவொரு உருப்படியான அறிவிப்பும் இந்த உரையில் இடம்பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் விளம்பர அரசியல் மட்டுமே இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது உரையில் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டார். இந்த விமர்சனம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது…

