Monday, April 13, 2026

கோலி, ரோஹித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! பிசிசிஐ எடுத்த அந்த அதிரடி முடிவு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது உச்சபட்சப் பிரிவான ‘A+’ பிரிவில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், ‘B’ பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் ‘A+’ என்ற பிரிவையே நீக்கிவிட்டு, இனி A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளில் மட்டுமே ஒப்பந்தம் அமையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News