பிரபல தென்னிந்திய நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் படித்த கல்லூரிக்குச் சென்று தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்த வீடியோவை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது
ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இசை மற்றும் பயணம் சார்ந்த
விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையில் தான் படித்த செயின்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரிக்கு சமீபத்தில் அவர் வருகை தந்துள்ளார். வீடியோவில் என்ன இருக்கிறது? ஸ்ருதிஹாசன்
வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவர் தான் படித்த கல்லூரியின் வளாகத்திற்குள் மகிழ்ச்சியுடன் உலா வருவதைக் காண முடிகிறது. கல்லூரியின் நுழைவாயில், வகுப்பறைகள் மற்றும்
நண்பர்களுடன் அரட்டை அடித்த இடங்கள் ஆகியவற்றை அவர் மீண்டும் பார்வையிட்டார். இந்தத் தருணங்கள் அவருக்குப் பழைய கல்லூரி கால நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்துள்ளதை அவரது முக பாவனைகள் வெளிப்படுத்துகின்றன…
View this post on Instagram

