Tuesday, June 2, 2026

உஷார் மக்களே..!! இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்..!!

சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, பகல் நேரத்தில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரியனின் நேரடி கதிர்கள் மற்றும் அனல் காற்று காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல், காற்றில் ஈரப்பதம் காரணமாகப் புழுக்கமும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மதிய நேரங்களில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் 28, 2026 அன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, கோடை காலத்தின் உச்சக்கட்ட வெப்பத்தை உணர்த்துகிறது.

சென்னையின் பல இடங்களில் மக்கள் குடைகள் மற்றும் முகக்கவசங்களுடன் வெயிலிலிருந்து தங்களை தற்காத்துக் கொண்டு பயணிப்பதைக் காண முடிகிறது.குடிநீர் மற்றும் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வரும் நாட்களிலும் இதே போன்ற வெப்பமான சூழல் நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News