Thursday, July 16, 2026

ரோஹித் சர்மாவுக்கு உயரிய விருது..!! ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் விருது பெற்று நெகிழ்ச்சிப் பதிவு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமும், கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கு, அவரது விளையாட்டுத் துறை பங்களிப்பைப் பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ரோஹித் சர்மாவுக்கு இந்த உயரிய விருதினை நேரில் வழங்கி சிறப்பித்தார்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜூன் 23-ஆம் தேதிதான் நான் முதன்முதலாக இந்திய அணியின் ‘கேப்’ (Cap) அணிந்து எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினேன்” என்று தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகையில், “அதே சிறப்பான நாளில், என்னுடைய இந்த நீண்ட நெடிய கிரிக்கெட் கதையின் மற்றுமொரு பெருமைமிக்க அத்தியாயம் இன்று சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியிடம் இருந்து அவர் விருது பெறும் இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவருக்குப் பல்வேறு விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News