Wednesday, June 3, 2026

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவு – ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க அறிவுறுத்தல்..!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் ஆன்லைன் கல்வி முறை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயணத்தைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் சேமிப்பை உறுதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது. மே 12, 2026 தேதியிட்ட இந்த அறிவிப்பு, கல்வித் துறையில் மீண்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடையால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் உடனடியாக இதற்கான டிஜிட்டல் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிகமான ஏற்பாடு என்றாலும், போர்ச் சூழலைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் புதிய நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க மத்திய அரசுத் தயாராக உள்ளது. பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகம் இந்த முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News