தமிழ் சினிமாவின் முன்னணி சண்டைக்கலைஞர் மற்றும் வில்லன் நடிகரான பொன்னம்பலம், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். தனது உடல்நலப் பாதிப்பிற்குச் சொந்த அண்ணனே உணவில் விஷம் கலந்ததுதான் காரணம் என அவர் சமீபத்தில் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த இக்கட்டான சூழலில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரூ.45 லட்சம் நிதியுதவி செய்து பொன்னம்பலத்தின் அறுவை சிகிச்சைக்கு உயிர்நாடியாகத் திகழ்ந்தார். இந்நிலையில், தற்போது வீல் சேரில் இருக்கும் பொன்னம்பலத்தை அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட சிரஞ்சீவி, “எதையும் சொல்லிக் காட்டாதீர்கள்;
உங்களுக்கு எப்போது என்ன உதவி தேவையென்றாலும் நான் இருக்கிறேன்” என உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், அவர் பூரண குணமடைந்த பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும், விரைவில் நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் சிரஞ்சீவி காட்டிய இந்தத் தாராள மனப்பான்மை மற்றும் நட்பு திரையுலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80, 90-களில் விஜயகாந்த் போன்ற ஜாம்பவான்களுடன் மிரட்டிய பொன்னம்பலம், மீண்டும் நலம்பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது…

