Monday, March 2, 2026
No menu items!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை – சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், அவையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அது குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் பேசவும், விவாதிக்கவும் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு போன்ற மிக முக்கியமான பொதுப்பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தே தாங்கள் குரல் எழுப்பியதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News